37 வது மாநில தடகள போட்டி

தமிழ்நடு தடகள சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் இனைந்து நடத்திய மாபெரும் தமிழ்நாடு மாவட்டகளுக்கிடையேயான ஜீனியர் தடகள  சாம்பியன்ஷிப் போட்டி நாமக்கல் கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகததில் நடைபெற்றது.இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டஙகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் இந்த தடகள போட்டியில் கலந்து கொண்டனர்,இப்போட்டி 100மீ ஓட்டபந்தயம்,உயரம் தாண்டுதல்,குண்டு எறிதல் ,தடை தாண்டுதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. 460 புள்ளிகள் பெற்ற சென்னை அணி  ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிசென்றது. 278 புள்ளிகள் பெற்று கோயமுத்தூர் மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும்,233 புள்ளிகள் பெற்று திருவள்ளுவர் மாவட்ட அணி மூன்றாம் இடமும், 137 புள்ளிகள் பெற்று சேலம் மாவட்ட அணி நான்காம் இடமும்,133 புள்ளிகள் பெற்று திருப்பூர் மாவட்ட அணி ஐந்தாம் இடமும் பிடித்தனர்.