ஐவர் கால்பந்து போட்டி

கோவை ஏ.ஜே.கே., கல்லுாரியின் நிறுவனர் நாள்  விழாவாக ஒரு பகுதியாக, ஆண்களுக்கான ஓபன் பிரிவு ஐவர் கால்பந்து போட்டி, நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே., ‘டர்ப் டென் 5’ மைதானத்தில் நடந்தது. இபோட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று, ‘நாக் அவுட்’ முறையில் போட்டிகள் நடைபெற்றன.

நடைபெற்ற  இறுதிப்போட்டியில், நேரு கல்லுாரி அணி, 5 – 1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் ஐ.எம்.வி., அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை பெற்றது

மூன்றாமிடத்துக்கான போட்டியில், பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரி ‘பி’ அணி 3 – 1 என்ற கோல் கணக்கில், அத்யாயனா பள்ளியை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தனர்

 முதல் இடம் பிடித்த அணிக்கு ரூ. 10 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த அணிக்கு ரூ.7,500, மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ரூ.5,000 மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன