மாவட்ட அளவிலான பளுதுாக்கும் போட்டி 

திருப்பூர் மாவட்ட அமச்சூர் பளுதுாக்கும் சங்கம் மற்றும் உடுமலை லயன்ஸ் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான பளுதுாக்கும் போட்டி லயன்ஸ் அரங்கில் நடந்தது.

உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன், இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், விவேகானந்தா பள்ளி தாளாளர் மூர்த்தி தலைமை வகித்தனர்.

மாவட்ட அமச்சூர் பளுதுாக்கும் சங்கத்தலைவர் யோகானந்த், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் பிரபு முன்னிலை வகித்தனர்.

போட்டிகள் யூத், ஜீனியர், சீனியர் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் நடந்தது. பல்வேறு கல்லுாரிகளைச்சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

முதலில் பெண்களுக்கான போட்டியும், தொடர்ந்து ஆண்களுக்கான போட்டியும் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.