மாநில அளவிலான ‘ஷார்ட் கோர்ஸ்’ நீச்சல் போட்டி

மாநில அளவிலான ‘ஷார்ட் கோர்ஸ்’ நீச்சல் போட்டிகள் மற்றும் தென்னிந்திய நீச்சல் போட்டிக்கான தேர்வு மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்தது.

இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் 1100 நீச்சல் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாவட்ட நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் தலைமையில் போலீஸ் துணை கமிஷனர் சினேகப்ரியா போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மாநில சங்க செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் முரளிதரன், துணைச்செயலாளர் திருமாறன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நெல்லை செயலாளர் லட்சுமணன் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் அமிர்தராஜ், நிர்வாகிகள் சிவபாலன், வெங்கடேசன், இளமுருகன் ஏற்பாடுகளை செய்தனர்.

சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி 609 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. சீனியர் பிரிவில் சாய் கணேஷ், ஸ்ரீநிதி, தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். குரூப் 1 பிரிவில் விஷால், ஹதயா, தனுஷா, குரூப் 2ல் சச்தேவ், மாலினிஷபா, குரூப் 3ல் மோனிஷாநாயுடு, சரண்சனாஸ்ரீ , குரூப் 4 ல் கிரிஷாவ், அனன்யா, குரூப் 5 ல் சன்ஞ்ஷித், யோகநிதி நடசேன், சான்விகா, குரூப் 6 ல் ஆதித்யா, ப்ரார்த்தனா, குரூப் 7 ல் சஞ்சீவிராம், ஆதிரா, கனிஷ்கா தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர். இவர்கள் டிச. 27,28,29 ல் பெங்களுருவில் நடைபெறும் தென்னிந்திய நீச்சல் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.