தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டி

தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சீறி பாய்ந்த கார்கள் பார்வையாளர்களை கவர்ந்தது

பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனம் மற்றும் “FMSCI” எனப்படும் இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டு அதன் முதல் சுற்று போட்டிகள் கோவை உள்ள செட்டிபாளையம்  பகுதியில் உள்ள கறி மோட்டார் ஸ்பீடு”வே வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

ஜே.கே டயர் நோவிஸ் கோப்பைக்கா கார் பந்தயம் (“எல்ஜிபி ஃபார்முலா 4”)கார் பந்தயம் பிரிவுகளாக இந்த போட்டிகள் நடத்தப்பட்டது.

“10 சுற்று 15” சுற்று என வெவ்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் தேசிய அளவில் சிறந்த கார் பந்தய வீரர்கள் பலர் பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 20″பேர் என பங்கேற்று போட்டிகள் நடத்தப்பட்ட சூழலில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் அடிப்படையில் அடுத்தடுத்த சுற்றுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பிரிவின் முதல் இரு போட்டிகளிலும் டார்க் டாண் அணியின் ஆர்யா சிங், தில்ஜித் முறையே முதல் இரு இடங்களையும், எம் ஸ்போர்ட்ஸ் அணியின் ருஹான் ஆல்வா மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

மூன்றாவது போட்டியில், ஆர்யா சிங், திஜில் ராவ், தில்ஜித் ஆகியோரும், நான்காவது போட்டியில், தில்ஜித், திஜில் ராவ், ஆர்யா சிங் ஆகியோரும் முறையே, முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

நோவிஸ் கோப்பைக்கான முதல் போட்டியில், அர்ஜூன், ஜோயல் ஜோசப், ஜாமிஜாம்ஷெட் ஷா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

இரண்டாவது போட்டியில், அர்ஜூன், நீதன் மெக்பர்சன், ஜிகர் முனி ஆகியோரும் மூன்றாவது போட்டியில், நீதன் மெக்பர்சன், அர்ஜூன், ஜிகர் முனி ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி., கோப்பைக்கான போட்டி துவங்கிய முதல் சுற்றிலேயே, மூன்று வீரர்கள் விபத்தில் சிக்கினர்.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய, முஹமது சாம்ருல் ஜூபேர் முதலிடத்தை பிடித்தார். ஜெகதீஷ், அபிஷேக் ஆகியோர் இரண்டு, மூன்றாமிடங்களை பிடித்தனர். ஜே.கே.டயர் 250 கோப்பைக்கான போட்டியில், சர்வேஷ், ஆல்ட்ரின், ஆஷிஷ் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.