மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள சாரதா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் தோழா தடகள அகாடெமி சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஓவர்ஆல் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். இந்த பிரிவில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மாணவர் I.குரு சிவா. 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஓவர்ஆல் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். இந்த பிரிவில் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மாணவர் M.S.சாய் சுந்தர். 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் I.குரு சிவா ஸ்டாண்டிங் பிராட் ஜம்பில் தங்கப்பதக்கமும் , 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் வென்றார். 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் M.S.சாய் சுந்தர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் , 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றார். 12 வயதுக்குட்பட்ட மாணவிகள் M .சஞ்சுகா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும் , S. நக்க்ஷத்ரா 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும்,100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் , P.S.வைஷாலி 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும், ஸ்டாண்டிங் பிராட் ஜம்பில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 10 வயதுக்குட்பட்ட மாணவிகள் S.ஷிவானி ஸ்டாண்டிங் பிராட் ஜம்பில் வெண்கலப்பதக்கமும், G.U.சாஹித்யா 60 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் M.திவாகர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கமும் , B.சஞ்சய் குருராஜ் 100 மீட்டர் மற்றும் 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். 4X100 ரிலே போட்டியில் 10 வயதுக்குட்பட்ட மாணவிகள் S.ஷிவானி, R.ஜனனிதா, G.லக்க்ஷனா ,G.U.சாஹித்யா தங்கப்பதக்கம் வென்றனர். 4X100 ரிலே போட்டியில் 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் E.பாலகுமரன்,K.M.ஶ்ரீ கோவர்தன் ,G.ஞானவேல்,I.குரு சிவா வெண்கலப்பதக்கம் வென்றனர். 4X100 ரிலே போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மாணவிகள் S .K .சுப்ரியா ,M .சஞ்சுகா,P .S .வைஷாலி,S.நக் க்ஷத்ரா தங்கப்பதக்கம் வென்றனர். 4X100 ரிலே போட்டியில் 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் D .கௌசிக் , M.நிதுல்,R.கௌதம்ராஜ், M.S.சாய் சுந்தர் தங்கப்பதக்கம் வென்றனர் . 4X100 ரிலே போட்டியில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் M.C.ஜீவன் ,K.பூபதி,B.சஞ்சய் குருராஜ்,M.திவாகர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர். பதக்கங்களை வென்ற மாணவ மாணவியர்களுக்கு பயிற்சியாளர் T.ஜீவன் பாபு மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply