கன்னியாகுமரி மாவட்டம் சி எஸ் ஐ ஹாலில் தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அமைச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய 20 வது மாநில சிலம்ப போட்டி நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்ட சார்பில் கற்பக பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 15 தங்கப் பதக்கமும் மூன்று வெள்ளி பதக்கமும் ஒரு வெண்கல பதக்கம் வென்றனர். இதில் சீனியர் பிரிவில் கம்பு வீச்சு மற்றும் குழு ஆயுத வீச்சில் கௌதமகிருஷ்ணன், இரட்டைவால் மற்றும் பிரிவில் தசாதரன், குழு ஆயுத வீச்சு மற்றும் கம்புச்சண்டை 65 கிலோ எடை பிரிவில் பெரியசாமி, வேல் கம்பு வீச்சு பிரிவில் மதன் பாபு, கம்பு சண்டை 55 கிலோ இடைப்பிரைவில் மும்மூர்த்தி, மான் கொம்பு பிரிவில் ரமணி, ஒற்றை வாழ்வீச்சு பிரிவில் மரியரிட்டா, இரட்டை சுருள்வாள் வீச்சு பிரிவில் ராஜம்,அலங்கார வீச்சு மற்றும் கம்பு சண்டை எடை பிரிவு 60 கிலோ எடைப்பிரிவில் சஞ்சய், கம்புச்சண்டை 45 எடை பிரிவில் பிரசிலா ஏஞ்சல் ஆகிய 11 பேர் தங்கப்பதக்கமும் ஒற்றை சுருள்வாள் வீசி பிரிவில் விஜய சந்தோஷ், கம்பு வீச்சு பிரிவில் சௌந்தர்ராஜ், கம்பு சண்டை 75 கிலோ இடை பிரிவில் கவின் வெள்ளி பதக்கமும், கம்பு சண்டை 50 கிலோ எடை பிரிவில் சசிதரன் வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு கற்பக பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி பதிவாளர் ரவி உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply